
வெளி மாநிலங்களிலிருந்து கடந்த 3 நாட்களில் லாரி, ரயில், பேருந்துகளில் நூதன முறையில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் 24 பேரை போலீஸார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைத் தடுக்க ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் துறையினர் சிறப்பு சோதனைகளில் ஈடுபடுகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆலோசனையின்பேரில் வெளி மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வரும் தனியார், அரசு பேருந்துகள், ரயில்களில் சோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீஸார் இணைந்து வெளிமாநில பேருந்துகள் வரும் முக்கியச் சாலைகளில் கடந்த 3 நாட்களாக தீவிர தோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g3Yms0x
0 Comments