Crime

விருதுநகர்: பொருளாதார குற்றப் பிரிவு வழக்கில் கைதான ராஜபாளையத்தைச் சேர்ந்தவர், தமிழகத்தில் முதன்முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் பெருகி வரும் நிதி நிறுவன மோசடி உட்பட பல்வேறு மோசடிகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஜூலை 8-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் பொருளாதாரக் குற்றவாளிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர். போதைப்பொருள் குற்றவாளிகள். பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகள் ஆகியோர் தமிழ்நாடு வன் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (1982-ன் சட்டம் 14, குண்டர் தடுப்புச் சட்டம்)- கீழ் கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zUQeOlH

Post a Comment

0 Comments