
காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக ரவுடிகள் உள்பட 26 பேரை போலீஸார் புழல் சிறையில் இருந்து விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்துக்கு கடந்த 31-ம் தேதி அழைத்து வந்தனர். பின்னர், காவல் வாகனத்தில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வாகனத்தில் பாதுகாப்புக்காக பெண் போலீ ஸார் உட்பட 15 போலீஸார் சென்றனர். இந்நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் திடீரென கூச்சலிட்டு பாட்டுப்பாடி போலீஸாரை கிண்டல் செய்து சீண்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rjoFiaq
0 Comments