
திருநெல்வேலி: பாப்பாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் சரகத்துக்கு உட்பட்ட இந்திரா காலனி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் சக்திகுமார் (22). அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களின் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறைக்கு இவர் தகவல் அளித்ததாகத் தெரிகிறது. இதனால், அவர் மீது அச்சிறுவர்கள் ஆத்திரம் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RZ6ujvs
0 Comments