
புதுச்சேரி: யூடியூபில் பெண்களை தரக்குறைவாக விமர்சித்த விருதுநகர் யூடியூபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் அருகே உள்ள சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி.கே.விஜய் என்கிற துர்க்கை ராஜ் மீது தமிழகத்தில் 4 இடங்களிலும், புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் புகார்கள் உள்ளன.
இவர் மீது சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துர்க்கை ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xIGRBQ6
0 Comments