Crime

புதுச்சேரி: யூடியூபில் பெண்​களை தரக்​குறை​வாக விமர்​சித்த விருதுநகர் யூடியூபரை புதுச்​சேரி சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். விருதுநகர் அருகே உள்ள சாத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்த பி.கே.​விஜய் என்​கிற துர்க்கை ராஜ் மீது தமிழகத்​தில் 4 இடங்​களி​லும், புதுச்​சேரி சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தி​லும் புகார்​கள் உள்​ளன.

இவர் மீது சைபர் க்ரைம் இன்​ஸ்​பெக்​டர் கீர்த்தி வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டார். அதைத்​தொடர்ந்து கடந்த 8 மாதங்​களுக்கு முன்பு துர்க்கை ராஜ் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். பின்​னர் ஜாமீனில் வெளியே வந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xIGRBQ6

Post a Comment

0 Comments