
சென்னை: பள்ளி மாணவி காதல் விவகாரத்தில் நண்பருக்கு ஆதரவாக வந்த கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டியதாக கூறப்படும் திமுக கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரினின் பேரன் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நிதின்சாய் (21). கல்லூரி மாணவர். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் தனது நண்பரான கல்லூரி மாணவர் அபிஷேக் (20) உடன் திருமங்கலம் பள்ளி சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2DSk7Ba
0 Comments