
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெத்தமோசான் பல்லி எனும் கிராமத்தில் கடந்த 7-ம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராமவ்வா (60) என்ற மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமவ்வாவின் மருமகன் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாரும் விபத்து நடந்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையில் உண்மை வேறுவிதமாக இருந்தது. சம்பவத்தன்று நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ராமவ்வாவை வெங்கடேஷ் அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அவரை மட்டும் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rdzkgVn
0 Comments