
பெங்களூருவில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சாகர் குருங் (37) தனது மனைவி ஊர்மிளா குமாரியுடன் (38) பெங்களூருவில் உள்ள சதாசிவநகரில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் ஊர்மிளா குமாரி தனது வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். 20-க்கும் மேற்பட்ட செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடியும் அதில் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cPuaAkI
0 Comments