
சென்னை: சென்னையில் வசிக்கும் சர்வதேச பாட்மின்டன் வீராங்கணைக்கு செல்போனில் தொடர் தொல்லை கொடுத்ததாக பெங்களூரு இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் வசிக்கும் பிரபல சர்வதேச பாட்மின்டன் வீராங்கணை ஒருவர், தமிழக சைபர் க்ரைம் காவல் துறையில் கடந்த செப்.21-ம் தேதி புகார் அளித்தார். அதில், ‘‘எனது வாட்ஸ்அப்-க்கு தொடர்ச்சியாக ஒரு நபர் தகவல்களை அனுப்புகிறார். அந்த நபர், பிரபல பெண் விளையாட்டு வீராங்கணைகளின் புகைப்படங்களை ‘டிபி’யாக வைத்து இதுபோன்ற தகவல்களை அனுப்புகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zBIqJc6
0 Comments