
கடலூர்: புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, பாமக சார்பில் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, அங்கிருந்த விசிக கொடிக் கம்பத்தை பெண் ஒருவர் கடப்பாரையால் அடித்து உடைத்தார். இது தொடர்பாக மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மருதூர் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில், பாமக மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ், கட்சியினர் சங்கர், அருள்செல்வி, அருள், கண்ணன், ஆகாஷ், பாண்டியன், முருகவேல், சிவனேசன், சூரியபிரகாஷ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இவர்களில் அருள் (38) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4FkmuSy
0 Comments