Crime

கோவை: கோவை செட்டிபாளையம் சாலை, மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலா இசக்கி முத்து. ஓட்டுநர். இவரது மனைவி தனலட்சுமி ( 37 ).

பிசியோதெரபிஸ்ட். கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி வீட்டில் தன லட்சுமி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். புகாரின் பேரில், செட்டி பாளையம் போலீஸார் விசாரித்து வந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, தன லட்சுமியின் வீட்டில் இருந்து ஓர் ஆணும், பெண்ணும் வெளியேறியது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ( 39 ), வால்பாறை சோலையார் நகரைச் சேர்ந்த சந்திர ஜோதி ( 41 ) என்பதும், இக்கொலை வழக்கில் இருவருக்கும் தொடர்புடையதும் தெரிந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L4YydH2

Post a Comment

0 Comments