Crime

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாகிநகா காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் இருவர் நேற்று முன்தினம் காலை சாகி விகார் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியேறிய நைஜீரியாவைச் சேர்ந்தடேனியல் நேமெக் (38) என்பவர் போலீஸாரை கண்டதும் வேகமாக ஆட்டோவில் தப்பி சென்றார்.

அவரை சாகிநகா போலீஸார் விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 88 கேப்சூல்களில் உயர் ரக கோகைன் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. நேமெக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நவி மும்பையில் தங்கி உள்ளார். அவரிடம் முறையான பயணஆவணங்கள் இல்லை. நவி மும்பையில் உள்ள விநியோகஸ்தர் ஒருவருக்கு கோகைன் போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MlO3krR

Post a Comment

0 Comments