Crime

விருதுநகர்: விருதுநகரில் சாலையோரம் நின்று இருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காவலர் ஒருவர் காயமடைந்தார்.

விருதுநகர் சூலக்கரை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (59). சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ) பணியாற்றி வந்தார். நேற்று இரவு டவர் திருட்டு போனது வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மருத நத்தம் கிராமத்துக்கு தனது பைக்கில் புறப்பட்டார். அவருடன், சூலக்கரை காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திகேயன் (40) என்பவரும் உடன் சென்றுள்ளார். பைக்கை சிறப்பு எஸ்.ஐ. புஷ்பராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0RaYTsZ

Post a Comment

0 Comments