
சென்னை: அம்பத்தூர் கிடங்கில் 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனையின் படி ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை எழில்நகர் மற்றும் நேரு நகர் 6-வது தெரு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kJxupzW
0 Comments