
கடலூர்: கடலூர் சிதம்பரம் சாலையில், செல்லங்குப்பம் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை கடை ஊழியர்கள் ஷோரூமை திறந்த போது, உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.2.91 லட்சம் ரொக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த, ஒரு கிராம் எடையிலான 6 தங்க நாணயங்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விற்பனை நிலைய மேலாளர் முருகன் திருப்பாதிரி புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lqHVdNY
0 Comments