
கிருஷ்ணகிரி: ஓசூரில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு (பகுதி 16) சொந்தமான நிலம் உள்ளது. இதில் குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை சிலர், போலியாக ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hOko5qt
0 Comments