
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் தொடர் கொள்ளைத் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர்.
திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மரத்துறை, நெய்க்குப்பை, மேலக்காட்டூர் ஆகிய பகுதிகளிலுள்ள 3 வீடுகளில் கொள்ளை நடந்தது. இது தொடர்பாக, பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர்சித்திக் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TbES7ly
0 Comments