Crime

திருவண்ணாமலை: சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படைவீடு கிராமத்தில் கடையை காலி செய்வதில் ராணுவ வீரர் பிரபாகரன் குடும்பத்துக்கும், கடையை கட்டி வாடகைக்கு விட்டிருந்த குன்னத்தூர் கிராமத்தில் வசிக்கும் குமார் மகன் ராமு தரப்புக்கும் கடந்த 10-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. ராமுவை ராணுவ வீரரின் மைத்துனர்கள் ஜீவா, உதயா ஆகியோரை கத்தியால் தாக்கி உள்ளனர். ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் கீர்த்தியை ராமு தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இரண்டு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கீர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ராமு ஆதரவாளர்கள் செல்வராஜ், ஹரிகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IqlSrvj

Post a Comment

0 Comments