
புதுடெல்லி: டெல்லி தெருவில் நடந்து சென்ற 16 வயது இளம்பெண்ணை கத்தியால் 22 முறை குத்திக் கொலை செய்த காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர். வடக்கு டெல்லியிலுள்ள ரோஹிணி அருகேஷாபாத் பகுதியிலுள்ள ஒரு தெருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு இளம்பெண் நடந்து சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். 22 முறை கத்தியால் குத்திய பின்னர் கத்தி அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, அங்கிருந்த சிமெண்ட் பலகையை எடுத்து அவர் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xh9wiOr
0 Comments