Crime

ஈரோடு: சமூக வலைதளத்தில் புகழ் பெறுவதற்காக, பிரதான சாலையின் போக்குவரத்து சிக்னலில் நின்று குளியல் போட்ட இளைஞர் மீது, 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா போக்குவரத்து சந்திப்பில், மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், சிக்னலில் நின்றார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பாத்திரத்தில் இருந்த நீரை தலையில் ஊற்றி குளிக்கத் தொடங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ChnvMV7

Post a Comment

0 Comments