Crime

சென்னை: "சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை இதுபோன்ற சைபர் குற்ற நபர்களிடம் பொதுமக்கள் பணத்தை தவறவிட்டிருந்தால், உடனடியாக 1930 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்" என்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

சென்னையில் காவல் துறை டிஜிபி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்தும், அந்த பிரிவுக்கு போதுமான ஆட்கள் உள்ளனரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "சைபர் க்ரைம் என்பது எதிர்கால குற்றங்கள் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நாம் எதிர்பாராத, இதுவரை நாம் சந்திக்காத குற்றங்கள். பல்வேறு வகையில் வந்துகொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள், உங்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்டு எளிதில் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடிச் சென்றுவிடுவர். தொழிலதிபர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களிடம் அவர்களது உயர் அதிகாரிகள் பேசுவதுபோல் ஏமாற்றி பணத்தைத் திருடியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/okbR3BH

Post a Comment

0 Comments