
திருவண்ணாமலை: வெம்பாக்கம் அருகே 11 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக வாயில் மதுபானம் ஊற்றியுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோதியம் பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுவன்.
இவர், அதே பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர், கடந்த 24-ம் தேதி பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சிறுவனை பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F48NZkJ
0 Comments