Crime

மானாமதுரை: மானாமதுரை அருகே கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தந்தையை கொலை செய்த மகன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்தவர் உதயக்கண்ணன் (53). ஒரு மாதத்துக்கு முன்பு அவரை காணவில்லைஎன அவரது மகள் தாரணி மானாமதுரை போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில் நேற்று காலை மானாமதுரை அருகேயுள்ள வேலூர் விலக்கு பகுதியில் சிவகங்கை சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் உதயக்கண்ணன் இறந்து கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rdPxe3Z

Post a Comment

0 Comments