
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், போலி மதுபானம் உற்பத்திசெய்து, விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து, அங்குள்ள ஒருசொகுசு பங்களாவில் சோதனைமேற்கொண்டனர். அப்போது,வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.25 லட்சம் மதிப்பிலான போலி மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32lVXIk
0 Comments