Crime

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே பெண் தொழிலா​ளர்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய வடமாநில பெண் கைது செய்​யப்​பட்​டார். ஓசூர் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரி​யும் பெண்​கள் தங்​கும் விடுதி லாளிக்​கல் பகு​தி​யில் உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள் தங்கியுள்ளனர்.

இந்​நிலை​யில், விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கூறி நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பெண்​கள் விடுதி முன்பு தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து வந்த உதவி ஆட்​சி​யர் அக்​ரிதி சேத்தி மற்​றும் எஸ்​.பி. தங்​கதுரை ஆகியோர் விசா​ரணை நடத்​தினர். பதற்​ற​மான சூழல் நில​விய​தால் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புக்​காக குவிக்​கப்​பட்​டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xS6iqpr

Post a Comment

0 Comments