
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தொழிலாளர்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் கைது செய்யப்பட்டார். ஓசூர் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி லாளிக்கல் பகுதியில் உள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறி நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உதவி ஆட்சியர் அக்ரிதி சேத்தி மற்றும் எஸ்.பி. தங்கதுரை ஆகியோர் விசாரணை நடத்தினர். பதற்றமான சூழல் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xS6iqpr
0 Comments