
கோவை: கோவை பீளமேடு பிருந்தாவன் நகர்பகுதியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி குணமடைந்ததும் குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கூடுதல் விசாரணை அதிகாரியாக துடியலூர் ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DNQLCd
0 Comments