
தஞ்சாவூர்: திருவண்ணாமலையில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்து பதுங்கி உள்ளனரா? என்பதைக் கண்டறிய 48 இடங்களில் போலீஸார் நேற்று வாகன சாதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்களை உடைத்து ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காரில் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க உஷார்படுத்தப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G5aSRoU
0 Comments