Crime

தென்காசி: இலஞ்​சி​யில் நடை​பெற்ற இரண்​டாம் நிலை காவலர் தேர்​வில் செல்​போனை பயன்​படுத்தி முறை​கேட்​டில் ஈடு​பட்ட தேர்​வர், அவருக்கு உதவிய பெண் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்டனர். தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நேற்று முன்​தினம் இரண்​டாம் நிலை காவலர், சிறைக்​காவலர் மற்​றும் தீயணைப்​பாளர் பணி​களுக்​கான எழுத்​துத் தேர்வு நடை​பெற்​றது.

தென்​காசி அருகே இலஞ்சி தேர்வு மையத்​தில் தேர்​வர் ஒரு​வர் செல்​போனை பயன்​படுத்​தி​யதை, தேர்வு அறை கண்​காணிப்​பாளர் கண்​டறிந்​தார். உடனடி​யாக அவரை பிடித்​து, காவல் துறை​யினரிடம் ஒப்​படைத்​தார். குற்​றாலம் போலீ​ஸார் அவரை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தி​ய​தில் அவர், சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்​பது தெரிய​வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wxEY8oF

Post a Comment

0 Comments