
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தனியார் பள்ளிப் பேருந்தை வழிமறித்து, கல்வீசி தாக்கிய இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பூவம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, அவரவர் வீடுகளில் இறக்கிவிடப் புறப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த அரசலங்குடி- எடுத்துக்கட்டி சாலையில் மாங்குடி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து கல்வீசி தாக்கினர். மேலும், பேருந்தில் இருந்த வைபர் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தினர். இதைப் பார்த்து பேருந்தில் இருந்த குழந்தைகள் பயந்து
போய் அலறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hjAgO9p
0 Comments