Crime

சென்னை: சிட்​பண்ட் நிறு​வனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி செய்த வழக்​கில் அந்​நிறுவன இயக்​குநர் உட்பட இரு​வரை சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்னை கோவிலம்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் டில்​லி​பாபு (39).

இவர், 2019-ம் ஆண்டு முதல் அரும்​பாக்​கம் பகு​தி​யில் செயல்​பட்டு வந்த சிட்​பண்ட் நிறு​வனம் ஒன்​றில் ரூ.2.17 லட்​சம் வரை செலுத்​தி​யுள்​ளார். சீட்டு பணம் முதிர்​வடைந்த பின்​னரும் டில்​லி​பாபு உட்பட சுமார் 70 பேருக்கு ரூ.2.4 கோடிக்கு மேல் பணம் திரும்ப கொடுக்​கப்​பட​வில்​லை. மேலும் அந்த நிறு​வனம் மூடப்​பட்டு அதன் உரிமை​யாளர் மற்​றும் நிர்​வாகி​கள் தலைமறை​வாகினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dqA9QJu

Post a Comment

0 Comments