
சென்னை: சிட்பண்ட் நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி செய்த வழக்கில் அந்நிறுவன இயக்குநர் உட்பட இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு (39).
இவர், 2019-ம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சிட்பண்ட் நிறுவனம் ஒன்றில் ரூ.2.17 லட்சம் வரை செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும் டில்லிபாபு உட்பட சுமார் 70 பேருக்கு ரூ.2.4 கோடிக்கு மேல் பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. மேலும் அந்த நிறுவனம் மூடப்பட்டு அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dqA9QJu
0 Comments