Crime

மதுரை: தாய்லாந்தில் வாங்கி இலங்கை வழியாக மதுரைக்கு கடத்திய ரூ.8 கோடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருட்களை மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

இலங்கை கொழும்புவில் இருந்து நேற்று மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த விமானத்தில் கொழும்பு - மதுரை வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். தஞ்சை முகமது மைதீன் (26), சென்னை சாகுல் ஹமீது (50) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HAnJxIX

Post a Comment

0 Comments