
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் போதையில் காவலர்கள் உட்பட 6 பேரைத் தாக்கிய ரவுடிகள் இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், தப்பியோடிய ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பழமலைநாதர் நகரில் நேற்று அதிகாலை 3 இளைஞர்கள் கட்டுமானப் பணி நடந்து வரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (23) என்பவரை சரமாரியாகத் தாக்கினர். அங்கிருந்து தப்பியோடிய கார்த்திக், அருகில் உள்ள மருத்துவமனையில் தஞ்சமடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uTeI6LW
0 Comments