
காஞ்சிபுரம்: தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை சரிவர கையாளாத காரணத்தால், டி.எஸ்.பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற வளாகத்திலேயே சீருடையுடன் கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபாத் அருகே உள்ள நத்தப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த பூசிவாக்கத்தைச் சேர்ந்த முருகன், தேநீர் குடிக்கும்போது தேநீர் சரி இல்லை என்று கேட்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சிவக்குமாரின் மருமகன் லோகேஷ் காவல்துறையில் பணி புரிகிறார். இந்த தகராறை கேள்விப்பட்ட லோகேஷ், சிலருடன் வந்து முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XJjAbMv
0 Comments