
சென்னை: கடத்தல் கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், அமலாக்கப் பணியகம் சிஐடி என்னும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரிவு போலீஸாரால் 428 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4,727 கிலோ கஞ்சா, 0.72 கி.கிராம் ஹெராயின் உள்பட மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை, அப்பிரிவு ஐ.ஜி செந்தில் குமாரி தலைமையிலான போலீஸார் செங்கல்பட்டில் உள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் தீயிலிட்டு நேற்று அழித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j1TqJEI
0 Comments