
விருத்தாசலம்: விருத்தாசலம் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நபர்களிடம் ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட பாமக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “பெண்ணாடத்தைச் சேர்ந்த ஷேக்தாவூத் மகன் சலீம் (28) என்பவர், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சத்தை என்னிடம் வாங்கினார். ஆனால் நகையை வாங்கித் தராமல் ஏமாற்றுகிறார். பணத்தைத் திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/onV7j4v
0 Comments