
சென்னை: இணையத்தில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வழியாகவும் மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகம், இரட்டிப்பு பணம், டிஜிட்டல் கைது, பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி, பங்குச்சந்தை முதலீடு, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் தினம்தோறும் அரங்கேறி வருகின்றன. மேலும், வங்கியிலிருந்து பேசுவதாகவும், போலீஸ் அதிகாரி பேசுவதாகவும் செல்போனில் அழைத்தோ, மிரட்டியோ பணம் பறிப்பு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YkAXrUe
0 Comments