
காரைக்கால்: இலங்கைக்கு கடத்துவதற்காக காரைக்காலில் 275 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். காரைக்காலில் கடந்த ஜூலை 16-ம் தேதி போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது, ஒரு காரில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அதில் பயணித்த திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த திலீப்(38), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல்(44) ஆகி யோரை கைது செய்தனர்.
மேலும், காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடியில் குமரவேல் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்பிலான 275 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kc1qNet
0 Comments