
சென்னை: கோயம்பேட்டில் காய்கறி வியாபாரியிடம், கத்தி முனையில் ரூ.45.70 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரம் குறித்து, கோயம்பேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நெற்குன்றம், ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் (42). இவர், கோயம்பேடு சந்தையில், காய்கறி மொத்த வியாபாரம் செய்கிறார். இவரது கடையில் சின்மயா நகர், 3-வது தெருவை சேர்ந்த நாராயணன் (35) என்பவர் வேலை செய்கிறார்.
இவர், சாந்தகுமாரின் வாடிக்கையாளர்களான சிறு வியாபாரிகளுக்கு காய்கறிகளை தினமும் விநியோகம் செய்து விட்டு, மாலையில் அதற்கான பணத்தை வசூல் செய்து உரிமையாளரிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாந்தகுமார், அவரது ஊழியரான நாராயணனிடம் கொத்தவால்சாவடி சந்தைக்குச் சென்று அங்கு கடை நடத்தி வரும் வாசிம் என்பவரிடமிருந்து ரூ.45.68 லட்சத்தை வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mx6Rfs7
0 Comments