
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஸ்மேரி (45). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது மகளை மருத்துவக் கல்லுரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க முயற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு சென்னை சோழிங்க நல்லூரைச் சேர்ந்த ரம்யா (37) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ரம்யா தான் சுகாதாரத் துறையில் அதிகாரியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
மேலும், தான் நினைத்தால் எம்பிபிஎஸ் சீட் பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய ரோஸ்மேரி, பல்வேறு தவணைகளாக ரூ.60 லட்சம் கொடுத்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் வைத்து இந்த பணத்தை ரம்யா வாங்கி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dwzmrT4
0 Comments