Crime

ஈரோடு: கல்லீரல் விற்பனை செய்த பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண் உடல் நலக் குறைவால் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் 37 வயது பெண். கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டு வேலைகள், கடை உள்ளிட்ட இடங்களில் அவ்வப் போது கூலி வேலை செய்து பிழைத்து வந்தார்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பரிசோதனையில் அவருக்கு கல்லீரலின் ஒரு பகுதியும், பித்தப்பையில் ஒரு பகுதியும் எடுக்கப்பட்டது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6ECJpz7

Post a Comment

0 Comments