
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள சொக்கம்பாளையம் பகுதியில் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் போதையில் சாலையில் தள்ளாடியபடியே வந்தார். திடீரென அவர் சாலையில் கிடந்த கற்களை எடுத்து, நடந்து சென்றவர்கள் மீது வீசினார்.
இதில், அங்கு சென்ற சின்னசாமி(65), வேலுமணி, கவிதா, கார்த்திகா ஆகியோர் காயமடைந்தனர். சொக்கம்பாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா(55) என்பவர் மீது கல் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, சகுந்தலாவின் தலையில் மீண்டும் பெரிய கல்லை தூக்கி போட்டார். அதில் பலத்த காயமடைந்த சகுந்தலா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AC8NBOv
0 Comments