
சென்னை: தந்தை கொலைக்கு 17 ஆண்டுகள் காத்திருந்து கல்லூரி மாணவனான மகன் பழி தீர்த்துள்ளார். இக்கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை டி.பி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் புல்கான் என்ற ராஜ்குமார் (42). இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு ஷாமியானா பந்தல் அமைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். ‘பி’ வகைப்படுத்தப்பட்ட ரவுடியான இவர் மீது ஒரு கொலை உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது கொலை கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக டி.பி.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 50 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெண் தாதா கிருஷ்ணவேனியின் வளர்ப்பு மகன் எனக் கூறப்படும் செந்திலை கடந்த 2008-ல் கும்பல் ஒன்று கொலை செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dt7fWuL
0 Comments