
கும்பகோணம்: திருவிடைமருதூர் டிஎஸ்பி தாக்கியதில் காதுகள் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டம் சிவபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேலு(40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். அங்குள்ள மாரியம்மன் கோயில் தேர் நிறுத்தும் இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டி வந்தார்.
அதற்கு குமரவேலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், நாச்சியார்கோவில் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து, வீடு கட்டும் நபர் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜுவிடம் இந்தப் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். பின்னர், கடந்த 3-ம் தேதி வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்கினார். அதை குமரவேலு செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hwAgKTr
0 Comments