Crime

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி, 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி உள்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், ‘அயனாவரத்தைச் சேர்ந்த பரணிதரன் (46), சேத்துப்பட்டைச் சேர்ந்த ரோகினி பிரியா (49) உள்பட மேலும் சிலர், எங்களுக்கு குடிசைமாற்று வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிகளைத் தெரியும். அவர்கள் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qBwWhkZ

Post a Comment

0 Comments