
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நாகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கராசு மகன் தினேஷ் (25), அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன் (26), பழனிசாமி மகன் சிவசக்தி (25). தினேஷ் பஞ்சர் கடை நடத்தி வந்தார். வெங்கடேசன், சிவசக்தி ஆகியோர் லாரி ஓட்டுநர்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூவரும் பைக்கில் சின்னசேலம் புறவழிச்சாலை வழியாக அம்மையகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சின்னசேலம் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, அவ்வழியே வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RWKGSfI
0 Comments