
சென்னை: சென்னை வியாசர்பாடி, பி.பி. சாலை பகுதியில் வசிப்பவர் ரபேல் (63). வீட்டின் அருகில் கார் பழுது பார்க்கும் ‘ஒர்க் ஷாப்’ நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராணி (60) என்பவர் அவரது காரை பழுது பார்க்க ரபேலின் பணிமனையில் விட்டுச் சென்றார். அந்த காரை கடையின் எதிரே உள்ள சாலையோரத்தில் ரபேல் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி அந்த காரை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த ரபேல் இது தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் காரை திருடிச் சென்றது கடலூர் மாவட்டம், பேப்பூர் தாலுகாவைச் சேர்ந்த அரவிந்த் (20) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TCIJWBe
0 Comments