
உடுமலை/ திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்எல்ஏவின் தென்னந்தோப்பில் வசித்து வந்த தந்தை - மகன் இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி, அவர்களது மூத்த மகன் மணிகண்டன் (30), அவரது மனைவி சபீனா ஆகியோர் அங்கு தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது 2-வது மகன் தங்கபாண்டி (28) நேற்று முன்தினம் வந்துள்ளார். இரவு கறிவிருந்துடன் மது அருந்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் மூர்த்திக்கும், மகன் தங்கபாண்டிக்கும் மோதல் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sygKIbE
0 Comments