
சென்னை: ராயபுரத்தில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் மோசடி செய்ததாக, தம்பதியர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார் (57). ராயபுரம் ஆடு தொட்டி பகுதியில் நகை அடமானக் கடை நடத்தி வருகிறார். இவர் ராயபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘ராயபுரம் ஆஞ்சநேயர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த சீனிவாசலு (60), அவர் மனைவி அம்சலட்சுமி (57) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி 196 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் கடன் பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1DyXufV
0 Comments