
கோவை: கோவையில் வசிக்கும் பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் செட்டிப்பாளையம் காவல்நிலையத்துக்கு சென்று, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் ஒருவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞர் சடலத்தை மீட்டு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் நியூட்டன்(28), பெனிட்டோ(27) சென்னை அண்ணா நகரில் தங்கி பணியாற்றி வந்தனர். பின்னர் அங்கு வந்த மற்றொரு நண்பரான ஜெயராமனுக்கு(24) வேலை வாய்ப்புக்காக நியூட்டன் ஓர் ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஆனால், ஜெயராமன் அதை முறையாக ஓட்டாமல் மது குடித்து சுற்றித்திரிந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5feuPjD
0 Comments