Crime

சென்னை: வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக், அவரது கூட்டாளி முகமது அலியை ஆந்திர மாநில போலீஸார் சென்னையில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நாகை மாவட்டம், நாகூரைச் சேர்ந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், கோவை தொடர் குண்டு வெடிப்பு, இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலை உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ‘ஆபரேஷன் அறம்’ என்னும் சிறப்பு நடவடிக்கை மூலம் அபுபக்கர் சித்திக்கை ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம், கடப்பா அருகே பதுங்கி இருந்த போது தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qW2VUY

Post a Comment

0 Comments